Home Tamil News Tamil Nadu News 'அரைக் கிணறு...' மகளிர் மசோதா குறித்து விஜய்காந்த் கமெண்ட்!
Illinois Institute Of Technology
  

Latest News:

'அரைக் கிணறு...' மகளிர் மசோதா குறித்து விஜய்காந்த் கமெண்ட்!

March 11, 2010 10:40:58

சென்னை: மகளிர் மசோதா ராஜ்யசபையில் நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சிதான். ஆனால் இது பாதிக் கிணறு தாண்டிய கதையாகிவிடக் கூடாது என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.


இதுகுறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கை:

பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா டெல்லி மேல்சபையில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று நிறைவேறியுள்ளது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் இது தற்காலிகமாக அரைகிணறு தாண்டியதாக ஆகிவிடக்கூடாது.

லோக் சபாவிலும் இந்த மசோதாவை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோருகிறேன். அதுவே, உண்மையான வரலாற்று சாதனையாக உருவாகும். எனவே இந்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறி விரைவில் சட்டமாகி செயல்படுத்தப்பட வேண்டும் என்று தே.மு.தி.க. விரும்புகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Related Tamilnadu News
:

மகளிருக்கு 33 சதவிகித ஒதுக்கீடு: அனைத்துக் கட்சிகளுக்கு கருணாநிதி வேண்டுகோள்!
Women's Quota Bill Will Be Passed By Year End: Pa. Chidambaram
மார்ச் 8-ல் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா தாக்கல்