Home Tamil News National News பெட்ரோல் - டீஸல், கேஸ் விலை உயருகிறது!


Illinois Institute Of Technology

Latest News:

பெட்ரோல் - டீஸல், கேஸ் விலை உயருகிறது!

February 04, 2010 21:45:24

டெல்லி: மண்ணெண்ணை விலையை லிட்டருக்கு ரூ.6-ம் சமையல் கேஸ் விலையை சிலிண்டருக்கு ரூ.100-ம் உயர்த்துமாறு நிபுணர் குழு அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.

அதேபோல பெட்ரோல் லிட்டருக்கு ரூ.​ 3-ம் டீசல் லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.​ 4-ம் உயர வாய்ப்புள்ளது.

இந்த பரிந்துரையை அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ளுமா என்பது தெரியவில்லை.​ ஆனால் குறிப்பிட்ட அளவு விலை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் அரசுத் துறை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு கடும் வருமான இழப்பு ஏற்படுகிறது.​ எனவே பெட்ரோலிய பொருள்களின் விலையை உயர்த்த வேண்டும் என்று அந்த நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் பெட்ரோலிய பொருள்களின் விலையை உயர்த்துவது குறித்து பரிசீலிக்க கிரித் பரிக் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது.​ இந்தக் குழு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தேவ்ராவிடம் புதன்கிழமை அளித்தது.

இந்த அறிக்கையில் மண்ணெண்ணெய் ​(கெரசின்),​​ சமையல் கேஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலையை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.​ மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ.​ 6 உயர்த்த வேண்டும்.​ சமையல் கேஸ் சிலிண்டருக்கு ரூ.​ 100 உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.​ மேலும் பெட்ரோல்,​​ டீசல் விலையை நிர்ணயிப்பதில் அரசு கட்டுப்பாட்டை நீக்கி,​​ சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விலையை நிர்ணயிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விலை நிர்ணயத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.​ 3-ம் டீசல் லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.​ 4-ம் உயர வாய்ப்புள்ளது. கெரசின்,​​ சமையல் கேஸ் சிலிண்டருக்கு தொடர்ந்து மானியம் வழங்குவது அவசியமாகிறது என்றும் குழு கூறியுள்ளது.

இந்தப் பரிந்துரைகள் அரசிடமோ அல்லது மத்திய அமைச்சரவையிடமோ சமர்ப்பிக்கப்பட்டு பரிசீலிக்கப்படும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறினார்.

Related National News:

Petrol And Diesel Cess To Continue Till 2030
Petrol Hike Tweaks Public To Save Money
Central Considers To Increase Petrol, Diesel Charges