Home Tamil News Tamil Nadu News தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது
  

Latest News:

தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

July 22, 2010 10:22:45
தமிழகத்தில் காலியாக உள்ள 840 உள்ளாட்சிப் பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. வாக்குகள் எண்ணிக்கை நாளை மறுநாள் 24 ஆம் தேதி நடைபெறுகிறது.

நகர்ப்புறப் பகுதிகளில் நடக்கும் தேர்தலில் 40 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 8 இடங்களில் யாரும் போட்டியிடவில்லை.

மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், சிற்றூராட்சித் தலைவர்கள், கிராம வார்டு உறுப்பினர்கள் என காலியாக உள்ள 710 பதவிகளுக்கு 557 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர். 60 பதவிகளுக்கு யாரும் போட்டியிடவில்லை. மீதம் உள்ள 223 பதவிகளுக்கு 660 பேர் போட்டியிடுகின்றனர்.

-சிவாஜி டிவி

Related TamilNadu News:

ADMK announces Rajyasabha candidates - Tamilnadu Political News
Rajyasabha candidates of DMK filed their nominations - Tamilnadu Politics
Kolkata election rigged: Mamta - Political News India