Home Tamil News Sri Lanka News இலங்கையில் தமிழ் பத்திரிகையாளர் மீது தாக்குதல்
  

Latest News:

இலங்கையில் தமிழ் பத்திரிகையாளர் மீது தாக்குதல்

July 24, 2010 10:42:16

இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் தமிழ் பத்திரிகையாளர் பி.ஏ. ஆண்டனி மார்க்,வியாழக்கிழமை இரவு மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். மன்னார் மாவட்டத்தில் டெய்லி மிரர்'பத்திரிக்கையின் செய்தியாளராக இருப்பவர் ஆண்டனி மார்க். இவர் மன்னார்-தலைமன்னார் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது, காரில் வந்த மர்ம நபர்கள் அவரைத் தாக்கவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.  அவரிடமிருந்து, சில ஆவணங்களையும் அவர்கள் பறித்துச் சென்றனர்.காயமடைந்த ஆண்டனி மார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவ் கொழும்புவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related SriLanka News:

Srilanka News Rajapaksa pardons Tamil journalist

Journalist attacked in CM function

Court orders Journalists to file fresh petitions on actors actress