Home Tamil News Sri Lanka News இலங்கை நாடாளுமன்றத்தை நள்ளிரவில் கலைத்தார் ராஜபக்சே
Illinois Institute Of Technology
  

Latest News:

இலங்கை நாடாளுமன்றத்தை நள்ளிரவில் கலைத்தார் ராஜபக்சே

February 10, 2010 08:59:59

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்க செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார் அந்நாட்டு அதிபர் ராஜபக்சே.

 ​
கடந்த 26-ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ராஜபட்ச,​​ அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.

தன்னை எதிர்த்து போட்டியிட்டவரும்,​​ ராணுவத்தின் முன்னாள் தளபதியுமான பொன்சேகாவை கைது செய்த மறுநாளே நாடாளுமன்றத்தை கலைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.​ அரசு முறைப் பயணமாக ரஷியா சென்று திரும்பிய ராஜபக்சே இதற்கான உத்தரவை செவ்வாய்க்கிழமை நள்ளிரவே பிறப்பித்ததாகவும் இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்தில் முடிவடைகிறது.​ நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து அதற்கான தேர்தல் ஏப்ரல் 8-ம் தேதி நடத்தப்படலாம் எனவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனு தாக்கல்:​ நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் வரும் 19 முதல் 26-ம் தேதிக்குள் இருக்கலாம் எனவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


Related Srilanka News:

சரத் பொன்சேகாவைக் கைது செய்து தரதரவென இழுத்துச் சென்ற இலங்கை ராணுவ போலீஸ்!

ராஜபக்சே மீண்டும் இலங்கை அதிபராகிறார்!
'என்னை கொல்ல சதி..' - ஓட்டலில் முடக்கப்பட்ட பொன்சேகா