Home Tamil News Sri Lanka News இலங்கை தமிழர்கள் பிரச்னை: கருணாநிதியிடம் பிரதமர் உறுதி
  

Latest News:

இலங்கை தமிழர்கள் பிரச்னை: கருணாநிதியிடம் பிரதமர் உறுதி

July 17, 2010 07:18:41

லங்கையில் தமிழர்கள் சுயமரியாதையுடனும்,​​ கண்ணியத்துடனும் வாழ இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் கருணாநிதியிடம் பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார்.
​ ​ இதுகுறித்து,​​ முதல்வர் கருணாநிதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:
​ ​ இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலை குறித்து கடந்த 3-ம் தேதி கடிதம் எழுதினீர்கள்.​ இதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.​ இலங்கை அதிபர் ராஜபட்ச அண்மையில் என்னைச் சந்தித்தபோதும்,​​ இலங்கை எம்.பி.க்கள் குழுவுடனான சந்திப்பின்போதும் இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது.
​ ​ ​ இலங்கையில் வாழும் தமிழர்கள் சுயமரியாதையுடனும்,​​ கண்ணியத்துடனும் வாழ இந்திய அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.​ இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இயல்பு நிலை திரும்புவதற்கு மத்திய அரசால் ஆன முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.​ போரினால் இடம் பெயர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு உதவும் வகையில் இந்திய அரசு ஏற்கெனவே ரூ.500 கோடியை ஒதுக்கியுள்ளது.
அங்குள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளைக் கட்டும் பணியிலும் மத்திய அரசு தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.​ பாதிக்கப்பட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பு மற்றும் நீடித்த வாழ்க்கைக்கான உதவிகளைச் செய்வதன் மூலம் அங்கு இயல்பான பொருளாதார நிலையை உருவாக்க அரசு முயற்சிக்கும்.
இந்த நிலையில்,​​ இலங்கையில் நிலவிவரும் பிரச்னைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண்பதற்கு உங்களது கருத்துகளையும்,​​ ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Srilanka News:

Peace in Lanka: PM writes to Karunanidhi

Srilanka Tamils: PM writes to Karunanidhi - News in Tamil Nadu
We talked about caste wise census, Pranab about meet with Karunanidhi