Home Tamil News National News தெலுங்கானா பிரச்சினைக்கு தனி கமிட்டி அமைப்பு - ப சிதம்பரம்


Illinois Institute Of Technology

Latest News:

தெலுங்கானா பிரச்சினைக்கு தனி கமிட்டி அமைப்பு - ப சிதம்பரம்

January 28, 2010 21:07:47

டெல்லி: தெலுங்கானா பிரச்சினை தொடர்பான தீர்வுக்கு தனி கமிட்டி ஒன்று அடுத்த வாரம் அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.


டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் ப.சிதம்பரம். அப்போது அவர் கூறுகையில், 

கமிட்டி அமைக்கும் பணிகளை முடிவு செய்யப் போகிறோம். கிட்டத்தட்ட அது முடிவுக்கு வந்துள்ளது. அனைத்தும் நன்றாகப் போனால், இந்த வார இறுதி அல்லது அடுத்த வாரத்திற்குள் கமிட்டி அமைக்கப்பட்டு விடும். 

கமிட்டியில் இடம் பெறப் போவோர் குறித்து இப்போதே கூற முடியாது. பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டு வருகின்றன. அடுத்த வாரம் நிச்சயம் கமிட்டி அமைக்கப்பட்டு விடும்.

இந்தக் கமிட்டியின் முக்கியப் பணி தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பான நடைமுறைகள், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிகளை பரிந்துரைப்பதுதான்...' என்றார்.

Related National News:

தெலுங்கானா அறிவிப்பிலிருந்து பின்வாங்கியது மத்திய அரசு!
தெலுங்கானாவுக்காக ராஜினாமா செய்யாத எம்எல்ஏ - எம்பிக்களை அடித்து உதையுங்கள் - சந்திரசேகரராவ்
தெலுங்கானா விவகாரம்: பிரதமர் முடிவு இன்று அறிவிப்பு