இலங்கை இறுதிப்போரில் விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக சிங்கள ராணுவம் சொல்லிவருகிறது.
ராஜீவ்காந்தி கொலை குற்றவழக்கில் பிரபாகரன் பெயர் இருப்பதால் இந்திய அரசு, பிரபாகரன் மீதான வழக்கை முடிக்க வேண்டும். அவரது மரண சான்றிதழ் தாருங்கள் என்று கேட்டு வருகிறது. ஆனால் இலங்கை இதுவரை கொடுக்கவில்லை. இதனை சில தினங்களுக்கு முன்புதான் சிபிஐ அறிவித்தது.
ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் பேட்டி அளித்தபோது, பிரபாகரனின் மரண சான்றிதழை இலங்கை அரசு அனுப்பி விட்டதாக கூறினார். இதனால் இவ்விவகாரத்தில் குழப்பம் நீடித்தது.
இந்நிலையில், பிரபாகரனின் மரண சான்றிதழை இலங்கை அரசு அளிக்கவில்லை என்று சி.பி.ஐ. இயக்குனர் அஸ்வினி குமார் மீண்டும் தெளிவாகக் கூறியுள்ளார். பல முறை கேட்டும் இலங்கை அரசு மவுனம் சாதிப்பதாக அவர் கூறினார்.
Related Srilanka News:
பிரபாகரன் 'மரண சான்றிதழை' இலங்கை அரசு இதுவரை தரவில்லை!! - சிபிஐபிரபாகரனும் முக்கிய தளபதிகளும் இருப்பை உறுதி செய்துள்ளனர்பிரபாகரன் பாதுகாப்பாக உள்ளார்! - விடுதலைப் புலிகள் அறிவிப்பு