சரத்குமார் - ஸ்ரேயா நடிப்பில், கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜக்குபாய் படத்தை பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டிருந்தார் சரத் குமார். ஆனால் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் யாரும் முன்வராத நிலையில், சன் பிக்சர்ஸ் மூலம் வெளியிட பிரம்மப் பிரயத்தனம் மேற்கொண்டு வந்தார் சரத் குமார்.
இந்த நிலையில்தான் படத்தை முழுசாக இன்டெர்நெட்டில் வெளியிட்டு விட்டுவிட்டார்கள் சிலர் விட்டார்கள் புத்தாண்டு அன்று.
உடனடியாக முதல்வரை அவரது வீட்டில் போய் சந்தித்த சரத்குமாரும் ராதிகாவும் இதுகுறித்து புலம்பினர். உடனே முதல்வரும் திருட்டு டிவிடி விற்பவர்களை கைது செய்ய உத்தரவிட்டார். இணையத்தில் படம் கிடைப்பதையும் தடுக்க உத்தரவிட்டார்.
நேற்று முழுக்க பர்மா பஜாரில் ரெய்டு அடித்த போலீசார் 50000 ஜக்குபாய் டிவிடிகளை பறிமுதல் செய்தனர். 5 பேரை கைது செய்தனர்.
Related Entertainment News:
Kalaignar Launched 'Jakubai' AudioSarathkumar Urges To Train Fire Factory WorkersSarath Kumar Launched Maama Miya Show at Chennai