தன்மீது சுமத்தப்பட்டுள்ள கற்பழிப்பு புகாரில் உண்மை இல்லை என்று நித்யானந்தன் கூறியுள்ளார்.
வாரணாசி கும்பமேளாவில் கலந்து கொள்ள சென்றிருக்கும் நித்யானந்தாவை, டெல்லியைச் சேர்ந்த எழுத்தாளர் விஜய மல்கோத்ரா சந்தித்து பேட்டி கண்டார்.
அதன் விவரம் :
கேள்வி: பெங்களூரில் உள்ள ஆசிரம கட்டிடம் இருக்குமிடம் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதா? பதில்: வள்ளல் பரம்பரையைச் சேர்ந்த பிரதாப் ராவ், ஜீவன்ராவ், கேசவ் ராவ் ஆகிய 3 சகோதரர்கள் ஆசிரமத்துக்கு நன்கொடையாக வழங்கிய இடம் அது. 2003-ம் ஆண்டு ஆசிரமத்தின் மீது கொண்ட பற்று காரணமாக இந்த இடத்தை வழங்கினார்கள். இதற்கான பத்திர பதிவுகள் அனைத்தும் சட்ட ரீதியாக செய்யப்பட்டுள்ளன.
கேள்வி: உங்கள் சொத்து தொடர்பான எல்லா விவரங்களையும் வெப்சைட்டில் வெளியிடுவீர்களா? பதில்: நிச்சயமாக அனைத்து விவரங்களையும் வெளியிடுவேன்.
கேள்வி: ஆசிரமத்தில் பணிபுரிந்த பெண் ஒருவர் மர்மமாக இறந்து விட்டதாக செய்தி வெளியாகி உள்ளதே? பதில்: கனடா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தவறி விழுந்தார். அவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே இறந்து விட்டார். பிரேத பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கேள்வி: உங்கள் மீது தமிழக போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளார்களே? பதில்: எனக்கு எதிராக கிளப்பப்படும் வதந்திகளில் இதுவும் ஒன்று. அதில் எள் அளவும் உண்மை இல்லை.
எந்தப் பெண்ணும் என்னால் பாதிக்கப்பட்டதாக இதுவரை புகார் சொல்லவில்லை.
கேள்வி: உங்கள் ஆசிரமத்தில் இளம் சிறுவர்களை அடைத்து வைத்துள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளதே? பதில்: எனது ஆசிரமத்தில் தங்கி உள்ள அனைவரும் அவர்களுடைய விருப்பப்படிதான் தங்கி இருக்கிறார்கள். கட்டாயப்படுத்தி யாரும் தங்க வைக்கப்படவில்லை. யார் வேண்டுமானாலும் ஆசிரமத்துக்கு வந்து விசாரிக்கலாம்.
Related National News:
அமெரிக்காவுக்கு
ஓடிவிட்டாரா ரஞ்சிதா?ரஞ்சிதாவைத்
திருமணம் செய்ய திட்டமிட்ட நித்யானந்தா!
நித்யானந்தா
மீது கொலை மிரட்டல் வழக்கு!