சென்னை: மும்பை மராத்தியர்களுக்கே சொந்தம் என்ற சிவசேனாவின் கோரிக்கைக்கு மகாராஷ்டிராவிலேயே மக்கள் ஆதரவு இல்லை. அதனைப் புறக்கணித்துவிட்டார்கள், என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், தென்னிந்திய மக்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் என்ற கருத்தும் தவறு என்றார் கருணாநிதி.
மகாராஷ்டிராவில் உள்ள வடஇந்தியர்களுக்கு ஆர்எஸ்எஸ் இயக்கம் பாதுகாப்பு அளிக்கும் என்று அதன் தலைவர் மோகன் பகவத் அறிவித்தார். இதையடுத்து, முதலில் தென்னிந்திய மக்களுக்கு இந்தி கற்றுக் கொடுங்கள் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related National News:
மீண்டும் பரபரப்பு கிளப்பும் ஸ்ரீராம் சேனாஷாரூக்கும் அமீரும் '2 இடியட்ஸ்' - சிவ சேனா கடும் தாக்கு