Home Tamil News Tamil Nadu News ரேஷன் அட்டைகள் 2011 வரை செல்லும்!


Illinois Institute Of Technology

Latest News:

ரேஷன் அட்டைகள் 2011 வரை செல்லும்!

December 22, 2009 15:22:47


சென்னை:​ தமிழகத்தில் தற்போது பொதுமக்கள் பயன்படுத்தி வரும் ரேஷன் அட்டைகள், ஜூன் 2011 வரை செல்லுபடியாகும் என அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் அட்டைகள் 2009 டிசம்பருடன் காலாவதியாகும் வகையில் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் புதிய அட்டைகள் வழங்க திட்டமிடப்பட்டது.

ஆனால், புதிய அட்டைகள் வழங்கவும், போலி அட்டைகளை கண்டுபிடித்து ஒழிக்கவும் வீடுவீடாக சென்று தணிக்கை செய்யும் பணிகள் இன்னும் முடிவு பெறாமல் தொடர்ந்து நடந்து வருகின்றன. 

இப்பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகே புதிய அட்டைகள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்படும்.

பொருட்கள் வழங்கும் போது தேவைக்கேற்ப புதிய உள்தாள்களை அந்தந்த நியாயவிலைக் கடைகளிலேயே சேர்த்து ஒட்டவும் அறிவுறுத்தி உள்ளோம் என்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

Related Tamil Nadu News:

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் சென்னை வருகை!
கருணாநிதிக்கு 'தமிழ் தலைமகன்' விருது வழங்கப்பட்டது!
புதுப்பொலிவுடன் மெரீனா... திறந்து வைத்தார் முதல்வர்!