Home Tamil News Tamil Nadu News ஆயிரம் பிரபாகரன்கள் வந்தாலும்...! - இவிகேஎஸ் இளங்கோவனின் வாய்சவடால்


Illinois Institute Of Technology

Latest News:

ஆயிரம் பிரபாகரன்கள் வந்தாலும்...! - இவிகேஎஸ் இளங்கோவனின் வாய்சவடால்

February 01, 2010 12:15:55

ஈரோடு: ஆயிரம் பிரபாகரன்கள் வந்தாலும், இந்திய ராணுவம் பார்த்துக் கொள்ளும் என்று வாய் சவடால் அடித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் இவிகேஎஸ் இளங்கோவன்.


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சட்டம் மற்றும் மனித உரிமைகள் துறை, அனைத்து சட்ட கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் ஈரோடு சி.எஸ்.ஐ. திருச்சபை அரங்கில் வன்முறை மற்றும் தீவிரவாத எதிர்ப்பு கருத்தரங்கம் நேற்று நடந்தது.

மாநில தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார். ஆர்.எம்.பழனிச்சாமி எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டுபேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:
 
காங்கிரஸ் கட்சியினர் அமைதியாக இருக்கிறார்கள் என்று நினைத்து கொண்டு பேசி கொண்டே இருக்க கூடாது. நாங்கள் திருப்பி பேசினால் என்ன ஆகும் என்பது தெரியாது. என்னுடைய வீட்டிலும், முன்னாள் எம்.பி. கார்வேந்தன் வீட்டிலும் வெடிகுண்டு வீசப்பட்டது. இதை கண்டு பயப்படமாட்டோம்.

இதைப் போன்ற சம்பவங்கள் மூலம் மரணம் வந்தால் அதை கொடுத்து வைத்ததாக நினைப்போம். உயிருக்கு பயந்தவர்கள் காங்கிரஸ்காரர்கள் அல்ல. தீவிரவாதத்தை தடுக்க வேண்டும்.

நளினி விடுதலை கூடாது!

சிறையில் உள்ள நளினியை விடுதலை செய்ய வேண்டும் என்று பலர் கூறுகிறார்கள். நளினி தனிப்பட்ட ஒரு பெண்ணாக இருந்தால் அவரை விடுதலை செய்யலாம். ஆனால் நளினி வன்முறை கும்பலில் அங்கமாக உள்ளார்.

பாராளுமன்றத்தை தாக்கியவன், பாதிரியார் மற்றும் அவருடைய குழந்தைகளை உயிருடன் எரித்தவர் என 22 பேர் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள். இதில் 23-வதாக நளினி உள்ளார். நளினியை விடுதலை செய்வது, தீவிரவாதத்தை விடுதலை செய்வது போன்றதாகும். அவரை விடுதலை செய்தால், அவரை போன்று விடுதலை கேட்டவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். தீவிரவாதத்தில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்தால், இந்தியாவில் தீவிரவாதம் அதிகமாகும்.

பழ.நெடுமாறன் மீது எனக்கு மதிப்பு, மரியாதை உண்டு. அவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். கண்டிப்பாக வருவார் என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டு இருக்கிறார். இந்தியாவிற்குள் பிரபாகரன் வந்தாலும், பிரபாகரனை போல் 1,000 பேர் வந்தாலும் இந்திய அரசும், ராணுவமும் அவர்களை விடாது..." என்றார்.

Related TamilNadu News:

ஈவிகேஎஸ் இளங்கோவன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: பிரபாகரன் படங்களைக் கிழித்ததன் எதிரொலி
ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை கண்டித்து சீமான் ஆர்ப்பாட்டம்!
Rahul Gandhi Revoked Congress: EVKS Elangova